மாணவர் மன்றம் - தமிழ் தேர்வுகள் 2017

தமிழ்த் தேர்வுகள் - 2017

பெருந்தகையீர் வணக்கம்

ஆண்டு தோறும் மன்றத் தமிழ் தேர்வுகள் சிரிய முறையில் நடைபெற ஊக்கம் தந்து உதவிய முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.

மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10, 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் மாணவர் மன்ற முன்மாதிரித் தமிழ்த் தேர்வுகள் நடத்தப்படும். ஆகவே, இவ்வாண்டில் மிகுதியான மாணவர்கள் மன்றத் தேர்வில் கலந்து கொள்ள ஆவன செய்து உதவுமாறு வேண்டுகிறோம்.

தேர்வுகள் நடைபெறும் நாள்

பத்தாம் வகுப்பு (S.S.L.C)/மெட்ரிகுலேஷன்(10 ஆம் வகுப்பு) 04.02.2017 சனிக்கிழமை
முற்பகல் 10 மணி முதல் 12.30 மணி வரை தாள் 1
பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை தாள் 2

பன்னிரண்டாம் வகுப்பு(+2)/மெட்ரிகுலேஷன்(12 ஆம் வகுப்பு) 04.02.2017 சனிக்கிழமை
முற்பகல் 10 மணி முதல் 1 மணி வரை பொதுத் தமிழ் தாள் 1
பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை பொதுத் தமிழ் தாள் 2

பாடத் திட்டம்

  • பத்து, பன்னிரண்டு ஆகிய வகுப்புகளுக்கு அரசுப் பொதுத் தேர்வுக்குரிய தமிழ்ப் பாட நூல்களே மன்றத் தமிழ்த் தேர்வுகளுக்கும் பாட நூல்களாகும்.
  • அரசுப் பொதுத் தேர்வுக்குரிய தமிழ் வினாத்தாள்களை ஒட்டியே மன்ற வினாத்தாள்களும் அமையும்.

பரிசுகள்

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்த் தேர்வுகளில் மாநில முதன்மை பெறும் பள்ளிகளுக்குக் கேடயங்கள் மன்ற ஆண்டு விழாவில் வழங்கப் பெறும், இவை தவிர ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குத் தமிழ் நூல்கள் பரிசாக வழங்கப்படும்.


மாநில பரிசுகள் பணமாக தரப்படும்

பத்தாம் வகுப்புத் தமிழ்த் தேர்வுக்குரிய பரிசுகள்

முதற்பரிசு ரூ   700   இரண்டாம் பரிசு ரூ   500    மூன்றாம் பரிசு ரூ   300

மாவட்டங்களில் முதன்மை பெறும் மாணவர்களுக்குச் சிறப்பு பரிசாகத் தமிழ் நூல்கள் வழங்கப்படும்.

பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்த் தேர்வுக்குரிய பரிசுகள்

முதற்பரிசு ரூ   1000   இரண்டாம் பரிசு ரூ   800   மூன்றாம் பரிசு ரூ  500   

தேர்வுகளில் நூற்றுக்கு 60ம் அதற்கு மேலும் மதிப்பெண் பெறுபவர்க்கு முதல் வகுப்பு நன்மதிப்பிதழும், 50 முதல் 59 வரை மதிப்பெண் பெறுபவர்க்கு இரண்டாம் வகுப்பு நன்மதிப்பிதழும், 35 முதல் 49 வரை மதிப்பெண் பெறுபவர்க்கு மூன்றாம் வகுப்பு நன்மதிப்பிதழும் வழங்கப்பெறும்.


தேர்வு கட்டணம்

பத்தாம் வகுப்பு (S.S.L.C) (இரண்டு தாள்கள்) ரூ 40.00
மெட்ரிக் பத்தாம் வகுப்பு (S.S.L.C) (இரண்டு தாள்கள்) ரூ 40.00
பன்னிரண்டாம் வகுப்பு (இரண்டு தாள்கள்) ரூ 45.00
மெட்ரிக் பன்னிரண்டாம் வகுப்பு (இரண்டு தாள்கள்) ரூ 45.00

தேர்வுக் கட்டணமும் விண்ணப்பமும் அனுப்ப வேண்டிய இறுதி நாள் 07.01.2017 சனிக்கிழமை

தேர்வுச் செலவு

தேர்வுக் கட்டணத் தொகையில் 20% விழுக்காடு தேர்வுச் செலவுக்கெனப் பிடித்துக் கொண்டு எஞ்சிய தொகையை அனுப்புதல் வேண்டும். மன்றத் தேர்வு மேற்பார்வையாளர் அன்பளிப்பு, விடைத்தாள்களைத் தேர்வாளர்கட்கு அனுப்பி வைக்கும் பார்சல் செலவு, தேர்வுச் சமயத்தில் உதவும் பணியாளர் அன்பளிப்பு ஆகிய செலவுகள் யாவும் தேர்வுச் செலவில் அடங்கும்.
தேர்வு எழுதுவதற்குரிய விடைத்தாள், தேர்வுக் கட்டணம் முதலியவற்றை அனுப்புதல் போன்ற செலவுகளுக்கு மாணவர்களிடமே பணம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

விடைத்தாள் திருத்த அன்பளிப்பு

பத்தாம் வகுப்பு ஒரு தாளுக்கு ரூ 4.00
பன்னிரண்டாம் வகுப்பு ஒரு தாளுக்கு ரூ 5.00

தேர்வு நிகழும் இடம்

10, 12 ஆம் வகுப்புத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள், தனித்தனியே ஒவ்வொரு வகுப்பிலும் முப்பது மாணவர்களுக்குக் குறையாமல் இருந்தால் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். அவர்கள் பயிலும் பள்ளியையே தேர்விடமாக வைத்துக் கொள்ளவேண்டும். முப்பதிற்குக் குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளியினர் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டா.

தேர்வுக் கட்டணம், விண்ணப்பம் அனுப்பும் முறை

குறிப்பிட்ட காலம் கடவாமல், விண்ணப்பங்களையும், தேர்வுக் கட்டணத் தொகையையும் அனுப்பித் தேர்வுப் பணி சிறக்க ஒத்துழைக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தைக் கேட்போலையாக (Demand Draft) அல்லது பணவிடையாக ( M.O. ) அனுப்ப வேண்டும். காசோலையாக ( Cheque ) அனுப்ப வேண்டா. கேட்போலையில். Manavar Manram, Chennai – 1. என்று குறிப்பிட்டு வாங்கி, விண்ணப்பத்துடன் இணைத்து ஒரே உறையில் மாணவர் மன்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பணவிடையாகவோ, கேட்போலையாகவோ அனுப்பி வைக்கும்போது, பள்ளி முகவரியையும் எந்ந வகுப்பில், எத்தனை மாணவர்கட்குரிய கட்டணம் என்பதையும், தவறாமல் குறித்து ஒரு கடிதம் இணைத்து அனுப்புக. விண்ணப்பத்தையும், கட்டணத்தையும் நேரிலும் தரலாம்.
தேர்வு நாளினை மாற்றம் செய்ய இயலாது. முழுக்கட்டணத்துடன் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வுக் கட்டணத்தைத் திருப்பி அனுப்ப இயலாது.

இன்றியமையாத குறிப்புகள்

  • விண்ணப்பம் அனுப்பிய பின்னர்க் குறிப்பிட்ட மாணவர்கட்குப் பதிலாக வேறு மாணவர்களை மாற்றிக் கொள்வதோ, தேர்வின்போது புதிய மாணவர்களைச் சேர்ப்பதோ கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது.
  • அந்தந்த வகுப்புத் தேர்வுகட்குரிய விண்ணப்பப் படிவங்களில் மாணவர்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். மாற்றி எழுதுதல் கூடாது.
  • ஒவ்வொரு வகுப்பிலும் கலந்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை, அனுப்பிய தொகை ஆகியவற்றை விண்ணப்பப் படிவத்திலுள்ள கட்டத்தில் குறிக்க வேண்டும்
  • திருத்தம் செய்வதற்குரிய விடைத்தாள்களைத் தங்களுக்கு அனுப்புவதற்கு வேண்டிய முகவரியைத் தெளிவாகக் குறிப்பிடவும். TVS / ABT / கூரியர் / அஞ்சல் நிலையம் ஆகிய இவற்றுள் தங்கள் பள்ளிக்கு அண்மையில் உள்ளதைக் குறிப்பிடவும்.
  • திருத்தம் செய்த விடைத்தாள்களைத் தங்களே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். மன்றம் கேட்கும்போது பதிவில்லாத பார்சல் மூலம் அனுப்பி வைக்கவும்.
  • தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை மன்றம் அறிவிக்கும் தேர்வாளர் முகவரிக்கு அனுப்ப வேண்டும். TVS/ ABT லாரி மூலம் அனுப்பினால் அப்பார்சலைப் பெறுவதற்கு (Way Bill Original) பற்றுச் சிட்டினைத் தேர்வாளர் முகவரிக்கு தனியாக அனுப்புக. மன்ற முகவரிக்கு அனுப்ப வேண்டாம். விடைத்தாள் கட்டினை அனுப்பிய விவரத்தினை மட்டும் மன்றத்திற்கு அறிவித்தல் வேண்டும்.
  • தங்களுக்குத் திருத்தம் செய்ய வேறு பள்ளியிலிருத்து வரும் விடைத்தாள்களைத் திருத்தம் செய்த பிறகு, மதிப்பெண் பட்டியலையும், பணம் பெறுவதற்கான பற்றுச் சீட்டினையும் நிறைவு செய்து மன்றத்திற்கு விரைந்து அனுப்புக.
  • ிருத்தம் செய்த விடைத்தாள்களைத் தாங்களே பாதுகாப்பாக வைத்துக் கெள்ளவும். மன்றம் கேட்கும்போது பதிவில்லாத பார்சல் மூலம் அனுப்பி வைக்கவும்.
  • தேர்வு முடிவுகள் அரசுத் தேர்வு தொடங்குவதற்கு முன்பு அறிவிக்கப் பெறும். நன்மதிப்பிதழ்களும், நூல் பரிசுகளும் தொடர்ந்து அனுப்பப் பெறும். மாநிலப் பரிசுகள் கோடை விடுமுறை கழித்து அனுப்பி வைக்கப்பெறும்.

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்க....